logo
home வழிபாட்டுத் தலங்கள் ஜனவரி 15, 2019
பக்தர்களை தலையில் தாங்கும் சிவன், காஞ்சி பெரியவரால் உலகிற்கு தெரியவந்த சிவாலயம்
article image

நிறம்

காஞ்சிபுரம் - திருப்புட்குழி வழியாக வேலூர் செல்லும் பெங்களூரு பிரதான சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலை வில், ஓச்சேரி என்ற கிராமத்திற்கு அடுத்து அமைந்துள்ள ஊர், சிறுகரும்பூர். இங்கே அமைந்துள்ளது, சுந்தர காமாக்ஷி அம்பிகை ஆலயம். கிட்டத்தட்ட 1500-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம். வ்யாக்ரபாதர் பூஜித்த ஸ்வயம்பு இலிங்கம் இத்தலத்தின் சிறப்பாகும், இங்குள்ள ஸ்வாமி.பார்த்தாலே நன்கு அறியலாம், கீழேபரந்தும், மேலே குறுகியும், பிடித்துவைத்தது போன்ற இலிங்க மூர்த்தி. கஜப்ருஷ்ட விமான அமைப்பின் கீழே அற்புதமாக குடிகொண்டுள்ளார். இக்கோயிலின்- தல மரம் - சரக்கொன்றை பரமேஸ்வரருக்கு பரம இஷ்டமான மரம். இத்தலத்து அம்பிகை தன்னுள் பாதியாக சிவபெருமான் உள்ளதை அறிவிக்க, ஒரு காதில் மகரக் குழையும், மறுகாதில் தோடும் அணிந்திருக்கிறார். தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே என்ற வாக்கிற்கிணங்க, இவ்வால யத்தில் அறுபத்து மூவர் இல்லை. மாறாக அறுபத்து மூன்று நாயன்மார்களும், தக்ஷிணா மூர்த்தியுடைய ஜடாபாரத்தில் இலிங்கங்களாகக் காட்சி தருகிறார்கள். அதாவது, சிவனை வழிபட்டு சிவமாகவே ஆனதால் இலிங்கமாகவும், அடியார்களை இறை வன் தலை மீது வைத்து பிள்ளை போல் கொண்டாடுவார் என்பது போல், தனது தலை யில் அடியார்களை சுமப்பது சிவபெருமான் அடி யார்களுக்கு செய்யும் மரியாதைக்கு சான்றாகும். கோவிலில் ஓரிடத்தில் வில்வமும்வேம்பும் ஒன்றாய்வளர்ந்திருக்கின்றன. வேப்ப மரம் தனது கிளையை வில்வத்தின் மீதுபோட்டவாறு வளர்ந்திருக்கிறது. இந்தக் காட்சியை பார்க்குபோது அம்பாள் சிவனுடைய தோள் மீதுகைபோட்டவாறு இருப்பதைப் போன்று இருக்கும். வில்வ மரம் மூன்று கிளைகள் விட்டு சூல வடிவில் வளர்ந் திருக்கிறது. அடியில் ஒரு பெரிய சிவலிங்கமும் அம்பாளும் உண்டு. தவிர அழகு வாய்ந்த விநாயகர், சண்முகர், நவகிரஹங்கள் சந்நிதிகள் உண்டு. ஸ்வாமியின் சந்நிதியில் முழுக்க கல் திருப்பணி. விமானம் தவிர. அதேபோல், எங்கும் காணக்கிடைக்காத வகையில், அம்பாளுக்கு முழுவதும் பச்சைக்கல் கொண்டு சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. பச்சைக்கல்லுடைய மகிமையால், அம்பாள் சந்நிதியில் உஷ்ணம் நிரம்புவதில்லை. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது. -அந்நியர்களின் படையெடுப்புக்கு அஞ்சி, முற்காலத்தில் எல்லா விக்கிரஹங்களும் ஸ்வாமி சந்நிதியில்வைக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், மறைக்கப்பட்டன.கோவில் இருக்குமிடம் தெரியாமல், மண்மேடு அமைத்து கோவிலை மூடிவிட்டனர். காலப்போக்கில் இங்குகோவில் இருந்ததே தெரியாமல்போனது. காஞ்சி பெரியவர்களின் உத்தரவுப்படி, தொ. மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள், இங்கே அகழ்வுப்பணி மேற்கொண்டு, மண்மேட்டுக்குள் இருந்த சந்நிதியைகண்டுபிடித்தார். -அருகே இருந்த அம்பாள் சந்நிதி வெற்றிடமாக இருந்ததால், சிறுவர்கள்விளையாட சென்றார் களாம், ஆனால் எப்போது போனாலும் ஒரு சர்ப்பம் சீறிக்கொண்டு அவர்களைவிரட்டியதாம். கோவில்கண்டுபிடிக்கப்பட்டதையும்,சர்ப்பத்தின் சீற்றத்தையும் குறித்து, காஞ்சிமஹாபெரிய வாளிடம் தெரிவித்ததை அடுத்து, பெரியவாள் இங்கே விஜயம்செய்து, தரிசனம் செய்தார்களாம். அம்பாள் சந்நிதிக்கு வந்த அவர், விக்ரஹம் இல்லாத போதும் சாந்நித்தியம் இருப்பதால் தான் சர்ப்பம் யாரையும் நுழையவிடாமல் தடுப்பதாக அறிந்தார். அதே போல், அங்கே ஒரு அழகிய சிவலிங்க ஆவுடையாரின் மீது, கல்லிலேயே அம்பாளுடைய ஸ்ரீசக்ரயந்த்ரம் இருந்தது. இதைக்கண்டபெரியவாள், அங்கி ருந்த நெருஞ்சி முட்களின் ஊடே, தர்ப்பை பாயை விரித்து, அமர்ந்துவிட்டார். ஒருசில நாட் களுக்கு அங்கிருந்து விலகவில்லை. பின்பு, உடனே திருப்பணி துவங்க அனுக்கிரஹம் தந்தார். காஞ்சியை சேர்ந்த சுப்பையா ஸ்தபதி இதைமேற்கொண்டு செய்தார். திருப்பணி நிறைவடையும் நேரம், தரைத்தளம் போட தரையைத் தோண்டியபொழுது, மேலும் ஒரு அம்பாள் சிலையும், அம்பாள் சந்நிதி விமானத் திற்கும் சுவருக்கும் இடையே வர வேண்டிய மேல் வரிசை சிற்பக்கற்களும் கிடைத்தன. கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தாயும் தந்தையும் சிசுவோடு இருத்தல் என பலவித சிற்பங்களை கொண்ட அக்கற்களை இன்றும் பிரகாரத்தில் காணலாம். விமானம் எழுப்பப்பட்ட காரணத் தால் அவற்றை மேல்வரிசையில் வைக்க இயலவில்லை. புதிதாக கிடைத்த அம்பாள் திரிபுரசுந்தரி என்றும், அவள் தான் த்ரிபுராந்தகேஸ்வரஸ்வாமி யின் போகசக்தி அம்பாளென்றும், சுந்தர காமாக்ஷி, தானே சிவசக்தி ஐக்கியமான ராஜ ராஜேஸ்வரிஅம்சமென்றும் பெரியவாளால் தெரிவிக்கப் பட்டு, அவ்வாறே சுவாமி சந்நி திக்குள்ளேயே தெற்கு நோக்கி ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாளும், தனி பச்சைக்கல் சந்நிதியில் கிழக்குநோக்கி ஸ்ரீ சக்ர பீடத்தோடு சுந்தரகாமாக்ஷி அம் பாளும் அருள்கின்றனர். அம்பாள் ஐக்கிய ரூபத்தில் ஸ்ரீசக்ரபீடத்தோடு இருக்கும் கோவில்களில் கண்டிப்பாக ஒரு காவல் தெய்வம் உண்டு. சாஸ்தா, பைரவர், வீரபத்ரர் என யாராவது இருப்பர். -இங்கேயும், தக்ஷனுக்கு ஆட்டுத்தலை தந்து, அனுக் கிரஹம் செய்த கோலத்தில் அனு கிரஹ வீரபத்ரர் அம்பாளுக்கு எதிரே இருக்கிறார். அவர் சிரசில் சிவலிங்கம் தாங்கியவாறு காணப்படுகிறார். ஸ்வாமி சந்நிதியில் விலகி இருக்கும் நந்தியும், சுவற்றில் பாதி புலி உடல்கொண்ட ஆண், ஒருபுறம் தீபம்காட்டுவதாகவும், பாதி புலி உடல்கொண்ட பெண் மறுபுறம் தூபம் காட்டுவதாகவும் சிற்பங்கள் உள்ளன. இவர் சிவப்பரம்பொருளை வணங்கிய புலி உருவம் பெற்ற வ்யாக்ரபாதர் என்று கூறுகிறார்கள். சுந்தரகாமாக்ஷி அம்பாள் கைகளில் பாசாங்கு சம், அபய வரதத்தோடு கூடிய பேருக் கேற்ற அழகு சொட்டும் திருமேனி. முன்னே இலிங்கபீடத்தில் ஸ்ரீசக்ரம். அம்பா ளுக்கு கால்களுக்கு இடையே த்வாரமும், அதன் மூலம் கொலுசுசார்த்தும் வழியும் உள்ளது. அம்பாளுக்கு அபிஷேகத்தின்போது தலையில் ஜலம் விடும்போது, கண்களை மூடிக்கொள்வது போலவும், ஜலம் வடிந்தவுடன் மீண்டும் கண்களைத் திறந்துகொள்வது போலும் மிகவும் அற்புதமாக காட்சி தருகிறாள். அம்பாள் பராசக்தியாக, ஸ்ரீவித்யாமூர்த்தி ஆக இருப்பதால், வாசலில் சுவர் களிலும் தூண்களிலும், கணபதி, ஸ்கந்தர், இலட்சுமி, சரஸ்வதி, இரண்டு குதிரைகளோடு சாமரம் வீசும் அஷ்வவல்லி, இரண்டு யானைகளோடுசாமரம் வீசும் கஜவல்லி (அச்வாரூடை சம்பத்கரி என்றும் கொள்ளலாம்)ஆகியவர்கள் காட்சி தருகின் றனர். சுவர்களின் இடையே ஒரு மாடத்தில் வாழைப்பழம் உரித்துசாப்பிட்டுக்கொண்டு, அம்பாளை நோக்கியவாறு, அவள் உத்தரவுக்கு காத்தி ருக்கும் கோலத்தில், அமர்ந் திருக்கும் குழந்தை ஆஞ்சநேயர் விக்கிரகம் உள்ளது. “இந்த அம்பாளுக்கேன் காமாட்சின்னு பேர்? காமாக்ஷி காஞ்சிலே உக்கார்ந்துண்டு தானே இருப்பா?” என்று பெரியவாளிடம் கேள்வி கேட் டுள்ளனர். இத்திருக் கோயிலை நிர்வாகித்த நிர்வாகிகள். “இப்போ, உன் அம்மா எங்க யோ உக்கார்ந்துண்டு இருக்கா, நீ போய் சாப்பாடோ, காபியோ கேக்கறே... என்ன பண்ணுவோ.. பொறுமையா இதோ வரேன்னு சொல்லிட்டு, எழுந்துவந்துபோட்டுத்தருவா... ஆனா, இந்தகாமாக்ஷி பாவம், எதையாது கேட்டுண்டு வர்றகொழந் தேளுக்கு, உடனே கொடுத்துடணும்னு ஆசையாம். அதாவது, உக்கார்ந்துண்டு இருக்கறவ எழுந்துவர்ற கொஞ்ச காலதாமதம் கூட அவளுக்கு பண்ண விருப்பம் இல்லையாம். அதான் நின்னுண்டு இருக்கா” என்று மிகவும் அழகாக கூறியுள்ளார். நின்ற கோலத்தில் அருள் புரியும் காமாட்சி இத்தலத்தின் பக்தர்களுக்கு நொடிப்பொழுதில் இன்னல்களை தீர்த்துவைப்பாள் என்று காஞ்சி பெரியவரால் கூறிய கூற்றிற்கு ஏற்ப இத்தலத்து அன்னை செயல் புரிந்து வருகிறாள். இத்தலத்தினைப் பற்றிய மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள தொலைபேசி எண். 09791505077, 09486060120.